Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் 6 புதிய வழித்தடங்களை பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் வேளாண்மைத்துறை அமைச்சர். கும்பகோணத்தில் நாலாம் தேதி சென்னையில் 500 புதிய பேருந்துகளை தமிழ் முதல்வர் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் மற்றும் குமுளி ஆகிய 6 புதிய பேருந்துகளை வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் நகரச் செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் அறிவழகன், மேலான் இயக்குனர்கள், பொது மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கிடைக்க தமிழக முதல்வர் வழியாக போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சட்டசபையில் வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் வேளாண்மை துறை மானிய கோரிக்கையில் விவசாயிகளுக்கு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.